பின்னழகு
கோடைக்காலம் என்பதால் சுவாமிக்கு வெப்பம் அதிகமாகக் கூதாது என்று சிரத்தையுடன் சந்தனம் சார்த்தியிருக்கின்ற நேர்த்தியைப் பாருங்கள்.
சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள்
அந்த இரண்டு தலங்களில் முதலாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தங்க கருட சேவை. இரண்டாவது சென்னை சைதாபேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் ஆலயத்தின் கருட சேவை. ஆம் இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
பிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தை மாதத்தில் திருவூரல் உற்சவத்திற்க்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாட வீதி வலம் வருகின்றனர்.
மூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த் வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது சிறிய திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.
வெகு அருமையான சேவை.வெகு நேர்த்தியான படங்கள். எனக்கு சைதாப்பேட்டையில் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.:(
ReplyDeleteவீட்டை விட்டு கிளம்பவே யோசிக்கும் இந்தக் கோடையில் பெருமாள் இப்படி உற்சவம் கண்டு நமக்கு மகிழ்வைத் தருகிறாரா.
என்ன ஒரு புண்ணியம் செய்தேனோ. இன்று இந்த சேவை கிடைக்க.
மிக மிக நன்றி.
வாருங்கள் வல்லி சிம்ஹன் அவர்களே. நான் உங்கள் விசிறி, தங்களுடைய பல பதிவுக்ளை படித்து இரசித்துள்ளேன். ஆனால் அதிகமாக பின்னூட்டம் இட்டதில்லை. சமயம் கிடைக்கும் போது இன்னும் பல கருட சேவை அனுபத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். வந்து சேவியுங்கள்
ReplyDelete