Pages

Wednesday, August 8, 2012

கண்ணன் நம்பி பிறந்தனன்


கோகுலாஷ்டமி நாளான இன்று சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப்  பெருமாளின் கண்ணன் திருக்கோலம் சிலவற்றைக் கண்டு களியுங்கள் அன்பர்களே. 


                                   சத்ய நாராயணர்  தவழும் கண்ணன் கோலம்
                                 
                                                  (வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் கோலம்)


வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் 

கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் 

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிட 
                                   கண்ணன்முற்றம் கலந்தளறாயிற்றே.  -பெரியாழ்வார் 


பெருமாளின் பின்னழகு

                                           மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி
                              ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
                                  பேணியுனக்கு பிரமன்விடுதந்தான்
                  மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ

பெருமாள் கீதாச்சாரியன் கோலம்


சத்ய நாராயணப் பெருமாள் பார்த்தசாரதி பெருமாள் அலங்காரம்

பெருமாள்  வலக்கையில் சங்கம்,  இடக்கை " என்னை சரணடைவாய் நான் உன்னை கடைத்தேற்றுவேன்" ( மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்னும்  வரத முத்திரை.  திருமுகத்தில் சாரதிக்கே உரிய மீசை.







அர்ச்சுனுக்கு கீதை உபதேசம் செய்யும் கோலம் 


அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி  நல்வாழ்த்துக்கள்

2 comments: