Wednesday, April 9, 2008

ஸ்ரீ ராம நவமி - 5 (பாசுரப்படி ராமாயணம் - யுத்த காண்டம்)

Visit BlogAdda.com to discover Indian blogs
கோதண்ட ராமர்


இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.

யுத்த காண்டம்




இராம இராவண யுத்தம்



காண எண்கும் குரங்கும் முசுவும்







படையாக் கொடியோனிலங்கை புகலுற்று








அலையார் கடற்கரை வீற்றிருந்து








செல்வ வீடணனுர்க்கு நல்லானாய்








வீரிநீ ரிலங்கை யருளிச்








சரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுக எய்து








கொல்லை விலங்கு பணிசெய்ய








மலையாலணை கட்டிமறுகரையேறி








இலங்கை பொடி யாகச்








சிலைமலை செஞ்சரங்கள் செல வுய்த்துக்








கும்பனொடு நிகும்பனும்பட








இந்திரசித் தழிய கும்பகர்ணன் பட








அரக்கராவி மாள, அரக்கர்








கூத்தர் போலக் குழமணி தூரமாட








இலங்கை மன்னன் முடி யொருபதும்








தோளிருபதும் போயுதிரச்








சிலைவளைத்துச் சரமழை பொழிந்து








கரந்துணித்து வெற்றிகொண்ட செருகளத்துக்








கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்







எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்







மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து







மணிமுடி பணிதர அடியிணை வணங்கக்







கோலத்திருமா மகளோடு







செல்வவீடணன் வானரக் கோனுடன்







இலக்குமணி நெடுந்தேரேறி







சீரணிந்த குகனொடு கூடி







அங்கணெடு மதில் புடைசூழ் அயோத்தி எய்தி




ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகம்







நன்னீராடிப்




பொங்கு இள ஆடை அரையில் சாத்தித்




திருசெய்ய முடியும் ஆரமும் குழையும்




முதலா மேதகு பல்கலனணிந்து




சூட்டு நல்மாலைகளணிந்து




பரதனும் தம்பி சத்துருக்கனனும்




இலக்குமணனும் இரவும் நண்பகலும் ஆட்செய்ய




வடிவினை இல்லாச் சங்குதங்கு முன்கை நங்கை




மலர்குழலாள் சீதையும் தானும்




கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்




தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.






சுபம்

மங்களம்


பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html

அயோத்தியா காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/2.html

ஆரண்ய காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/3.html

சுந்தர காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/4.html




பாசுரப்படி ராமாயணம் நிறைவு




2 Comments:

Blogger Expatguru said...

அழகிய தமிழில் அருமையாக பாசுர ராமாயணத்தை படிப்பதற்கு பரவசமாக இருந்தது. மிக்க நன்றி.

April 10, 2008 at 12:13 AM  
Blogger S.Muruganandam said...

ஸ்ரீ ராம் ஜெயம், ஸ்ரீ ராம் ஜெயம், நன்றி expat guru அவ்ர்களே.

April 17, 2008 at 7:27 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home