Wednesday, September 9, 2009

ஆவணியில் ரோகிணி நீ பிறந்த திருநன்னாள்

Visit BlogAdda.com to discover Indian blogs
எல்லாருக்கும் இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் இல்லங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ருக்மிணித் தாயாருடன் தன் பிஞ்சுப்பாதங்கள் பதித்து நடந்து வந்து எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

இந்த வருடம் இரட்டிப்பு சந்தோஷம் கோகுலாஷ்டமி இரண்டு தடவை கொண்டாடும் வாய்ப்பு கிட்டியதல்லவா? சந்திரனை (சந்திரமானம்) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் வட மாநில மாதங்களின்படி ச்ரவண மாதத்தின் அஷ்டமி திதி போன மாதம் வந்தது அன்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினோம். சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் (சௌரமானம்) நம் தமிழ் மாதத்தின் ஆவணி மாத அஷ்டமி தி்னமான இன்று இன்னொரு முறை கொண்டாடுகின்றோம். இன்றும் பல் வேறு ஆலயங்களின் ஸ்ரீ கிருஷ்ணரின் பல் வேறு லீலைகளை விளக்கும் படங்கள் மற்றும் பாசுரங்கள் கண்டு எம்பெருமான் அருள் பெறுங்கள் அன்பர்களே.

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்

புன்னைமர வாகன சேவை



எல்லே! ஈதென்னஇளமை? எம்மனைமார்காணிலொட்டார்

பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குருந்தேறியிருத்தி

வில்லாலிலங்கை யழித்தாய்! நீ வேண்டியதெல்லாம்தருவோம்

பல்லாருங்காணாமேபோவோம் பட்டைப்பணிந்தருளாயே.

- நாச்சியார் திருமொழி

*********


சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணப் பெருமாள்
வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் கோலம்
( பிரம்மோற்சவம்)


கன்னலிலட்டுவத்தோடுசீடை காரெள்ளினுண்டைகலத்திலிட்டு

என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் இவன்புக்கவற்றைப் பெறுத்திப்போந்தான்

பின்னுமகம்புக்குறியைநோக்கிப் புறங்கொளி வெண்ணையும்சோதிக்கின்றான்

உன்மகன் தன்னையசோதைநங்காய்! கூவிக்கொள்ளாயிவையும்சிலவே.

- பெரியாழ்வார் திருமொழி


வெண்ணெய்த்தாழி கண்ணன் பின்னழகு

********

நுங்கம்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள்
தவழும் கண்ணன் திருக்கோலம்


வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே! - ஆனாச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமோ?

முன்னொருநாள்
மண்ணையுமிழ்ந்தவயிறு.


தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய

பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்

ஆழிகொண்டுன்னையெறியும் ஐயுறவில்லைகாண்

வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.

- பெரியாழ்வார் திருமொழி


****************

கோசை என்று வழங்கப்படும் கோயம்பேடு
வைகுண்டவாசப் பெருமாள்
தவழும் கண்ணன் கோலம்



சீதக்கடல் உள்ளமுதன்ன தேவகி

கோதைக்குழலாள் அசோதைக்குப் போதந்த

பேதைக்குழவி பிடித்து சுவைத்துண்னும்

பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்து காணீரே.


உழந்தாள்நறுநெய் ஒரோர்தடாவுண்ண

இழந்தாளெரிலினாலீர்த்து எழில் மத்தின்

பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்

முழந்தாளிருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்து காணிரே.

- பெரியாழ்வார் திருமொழி


**********

சத்ய நாராயணர் முரளி கிருஷ்ணர் கோலம்


இடவணரையிடத்தோளொடுசாய்த்து இருகைகூடப்புருவம்நெரிந்தேற

குடவயிறுபடவாய்கடைகூடக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது

மடமயில்களொடுமான்பிணைபோலே மங்கைமார்கள்மலர்க்கூந்தலவிழ

உடைநெகிழவோர்கையால்துகில்பற்றி ஒல்கியோரிக்கணோடநின்றனரே.

கண்ணன் காலை மடித்து ஒய்யாரமாக கையில் வேய்ங்குழல் கொண்டு நாச்சிமார்களுடன் சேவை சாதிக்கும் அழகை என்ன சொல்லி வர்ணிக்க?

********

சத்ய நாராயணர் ஏணிக் கண்ணன் கோலம்




பல்லவி
எல்லையில்லாத விஷமக் காரன்டீ!


எத்தனையடி இவனுகென பக்ஷணங்கள் தின்ன

ஏராளமும் நானாவகை வைத்திருந்தும் என்ன

வித்தகமுள்ள ஒத்தவயது தோழரொடும் முன்ன

வெண்ணை களவாடுறானே என்னடி நான் பண்ண ? (எ)

அனுபல்லவி

பொல்லாத்தனமுள்ள செய்கையினைக் கண்டால் பொங்குதடி கோபம்

புன்னகை பூத்த முகத்தினைக் கண்டாலோ மங்குதடி - தாபம்


எல்லாத்துக்கும் மேலே ஒன்று சொல்வேனடி யாருக்குமில்லாத லாபம்

எங்கள் குலத்துக்கு வந்ததாலே இந்த ஈரேழுபுவனங்களுக்கும் ப்ரதாபம் (எ)

சரணம்
புண்ணியனுக்கு பாலூட்ட எண்ணினாலோ
பொங்குதடி ஒர் அச்சம் அந்த

பூதனைக்கு வந்த கதியாகுமோ என்ற

எண்ணம் தானாகுது மிச்சம்


பண்ணின தான தருமங்கள் யாவுமே
பலனாச்சேடி போடி உச்சம்


பாக்கியம் எண்ணினால் எனக்கு இந்த
ஈரேழு பதினாலு லோகமும் துச்சம். (எ)


-ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர்


கண்னன் இங்கே ஏணிப்படி மேலே ஏறி வெண்ணெய் களவாடச் செல்லும் காட்சி கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அலங்காரம்.

********
திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசப்பெருமாள்
கோபால கிருஷ்ணர் கோலம்




பிரம்மோற்சவ சமயத்தில் பெருமாள் பவனி வரும் போது அதே போல அலங்காரம் செய்த சிறு பெருமாள்களை சிறுவர்கள் அப்படியே அலங்கரித்து ஏளப்பண்ணுவார்கள் கீழே காணும் படங்கள் எல்லாம் சிறுவர்களின் ஆராதனைப் பெருமாள்கள்.


சிறுவிரல்கள் தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிப்ப

குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது

பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப

கறவையின்கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே.



இங்கே பாருங்கள் மிக்க சிரத்தையுடன் பின்னழகிற்கு சடை வைத்து எம் கிருஷ்ணனுக்கு அலங்கரித்து கொண்டு வந்த அழகை. மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டு வரும் ஒரு பக்தியை என்னவென்று சொல்ல.


*********

மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயம்
நவநீத கிருஷ்ணர் காளிங்க நர்த்தன திருக்கோலம்


ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட பூத்தநீள்

கடம்பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த

காளியன்மேல் நடமாடிய

கூத்தனார்வரில் கூடிடுகூடலே.

- நாச்சியார் திருமொழி

பல்லவி

வையமளந்து வானளந்த ஓ.... மாதவா
வரதாபயகரம் தரு கருமுகில் வர்ண (வை)

அனுபல்லவி

செய்யத் தாமரை சீரடி கொண்டு
சீறிய காளிய மேலாடியது கண்டு
உய்யத் தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு உலகீ
ரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அதுதரு

தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமி திமி திர் ரீ தைய
தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு ணந்தம் ணந்
தம் பாரிஜாத கந்தம் . . . . . . . .
கிடத்தக திரிஜமுணந்தரிகுகு குந்தம் ஜந்தரி திரிதிலான

தித்திளாங்கு தையத் தையத் தித்ஜையத கஜ்ஜையததிரி
சையத்தைய புவனங்களும் உய்ய (வை)



காயாமலர் நிறவா! கருமுகில்போலுருவா!

கானகமாமடுவில் காளியனுச்சியிலே


தூயநடம்பயிலும் சுந்தரவென்சிறுவா!


துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!


என்னங்க நிஜமாகவே அன்று பெரியாழ்வார் பாடியபடி கண்ணன் அன்று ஆடிய ஆடல் கண்ணில் தோன்றுகின்றதா?

*********

சத்யநாராயணப் பெருமாள்
ஊஞ்சல் கண்ணன் கோலம்


கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரவெறிந்து

பின்தொடார்ந்தோடியோர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்

நின்திறத்தேனல்லேன்நம்பி! நீபிறந்ததிருநன்னாள்

நன்றுநீ நீராடவேண்டும் நாரணா! ஓடாதேவாராய்.

********

சத்ய நாராயணர் கோபால கிருஷ்ணர் கோலம்


சீலைக்குதம்பையொருகா தொருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ

கோலப்பனைக் கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்

காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்

ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை.

கோபாலகிருஷ்ணருடன் உபய நாச்சியார்களுடன் ஆண்டாள் நாச்சியாரும் பகல் பத்து உற்சவத்தின் போது சேவை சாதிக்கும் அழகை காண்கின்றீர்கள்.



அதே கோபால கிருஷ்ணர் திருக்கோலம் உபய நாச்சியார்கள், ஆண்டாள் நாச்சியாருடன் பெரிய பிராட்டி அகலகில்லேன் இறையுமென்று உறையும் திருமகளும் சேர்ந்து சேவை சாதிக்கின்றார்.






உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்.


********


Labels: , , ,

2 Comments:

Blogger SURYA said...

தங்களுக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். அருமையான படங்கள் அதற்கேற்ற பாசுரங்கள்.

September 11, 2009 at 10:34 PM  
Blogger S.Muruganandam said...

மிக்க நன்றி SURYA வந்து தரிசனம் பெற்றதற்கு , சகலமும் கிருஷ்ணார்ப்பணம்.

September 12, 2009 at 5:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home