Sunday, June 8, 2014

பரதவர் குல மருமகன் கருட சேவை -1

Visit BlogAdda.com to discover Indian blogs
திருகண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்
 மாசி மக தீர்த்தவாரி


தாயார்களுடன் சௌரிராஜப்பெருமாள்

கண்ணனின் பெயரைத் தாங்கிய கிருஷ்ணாரண்யத்   தலங்கள்  ஐந்து உள்ளனஅவையாவன   திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கைதிருக்கண்ணபுரம்கண்ணன்   கவித்தலம்மற்றும் திருக்கோவிலூர் ஆகும். இவை ஐந்தும் சேர்ந்து "பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்" என்று சிறப்பிக்கப்படுகின்றன.  இந்த ஐந்து தலங்களில்   திருக்கண்ணபுரத்திற்கு   ஒரு தனி   சிறப்பும் பெருமையும் உண்டு அது   என்னவென்றால்   இத்திருக்கோவிலில்      எழுந்தருளியிருக்கின்ற         சௌரிராஜன்    என்னும் நீலமேகப்பெருமாள் மீனவர் குல ராஜகுமாரியை  மணந்து,  பரதவர் குல மருமகனாக திகழ்கின்றார்அந்த மீனவர்களும்   பெருமாளை மாப்பிள்ளை சுவாமி!மாப்பிள்ளை சுவாமி!” அன்பொழுக தங்கள் வீட்டுக்கு வந்த மருமகனை எப்படி கவனிப்போமோ அது போல  கௌரவப்படுத்துகின்றனர்இவ்வாறு  உள்ளத் தூய்மையோடு   இறைவனிடம் பக்தி செய்பவர்களுக்கு சாதிமதமோ ஒரு தடை இல்லை  என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் சௌரிராஜப்பெருமாள்.


திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்
 ஆலயத்தில் சௌரிராஜர்

தல வரலாறு:  கண்டவர் தம் மனம் உருக்கும் திருக்கண்ணபுர தலத்தில் சில முனிவர்கள் உணவுநீர் கொள்ளாமல் பெருமாளைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டதால் நெற்கதிர்களைப் போன்று மெலிந்தனர்திருமாலிடம் எட்டெழுத்து மந்திரம் கற்ற உபரிஸரவஸு என்ற மன்னன் படையுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது பசித்ததுகதிர்களாய்த் தோற்றமளித்த முனிவர்களை அறுக்கத் தொடங்கியதும் 16 வயது சிறுவனாய்த் தோன்றி மன்னனிடம் போரிட்டார் மகாவிஷ்ணு! 

போரிட்ட படைகளும்மன்னனும் களைத்தனர்நாராயணாஸ்திரத்தை ஏவினான் மன்னன்அஸ்திரம் சிறுவனின் தோளில்  மாலையாகியதுதன்னை எதிர்த்துப் போரிட்டது எம்பெருமான் என்று உணர்ந்த மன்னன் மன்னிப்பு வேண்டினான்மன்னித்துநீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்து அவன் விருப்பப்படி இங்கே கோயில் கொண்டார் திருமால்!.  இத்தலத்தின் விமானம் உத்பலாவதக விமானம்மஹா விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் செய்வதாக ஐதீகம்எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்யமுடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.


சௌரிராஜப் பெருமாள் கருடசேவை

குலசேகர ஆழ்வார் தன்னை கௌசலையாக பாவித்து,    காவிரி நல் நதி பாயும் கணபுரத்தம்மானை ஸ்ரீராமனாகவே எண்ணி  தாலாட்டுப் பாடியிருக்கிறார் அதில் ஒரு பாசுரம்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்திவித்தாய்செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!
என்னுடையவின்னமுதேஇராகவனேதாலேலோ!.


சௌரிராஜப்பெருமாளுடன் வந்த திருமருகல்
ஸ்ரீவரதராஜப்பெருமாள்


தங்கள் பகுதிக்கு வரும் சௌரிராஜப்பெருமாளையும் திருமருகல் பெருமாளையும் வரவேற்கும் காரைக்கால் பகுதி 7 பெருமாள்கள்.

காரைக்கால் பகுதி பெருமாள்கள்

                                                              திருப்பட்டினம் வீழீ வரதராஜப்பெருமாள்

முக்தி அளிக்கும் தலங்களான திருவரங்கம்ஸ்ரீமுஷ்ணம்திருவேங்கடம்வானமாமலைசாளக்ராமம்பத்ரிகாஸ்ரமம்நைமிசாரண்யம் இவற்றில்  எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு எழுத்தாக இயங்கும் பெருமாள் மொத்த  எழுத்துக்களாக அருளும் திருத்தலம்!. எனவே இத்தலம் அஷ்டாக்ஷர சித்தி தலம் என்று அழைக்கப்படுகின்றதுமேலும் “ நாதாய சௌரேய  நம:”   என்னும் மந்திரத்தை பெருமாளே இங்கு அருளினார்.   விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள சூர சௌரி ஜனேஸ்வர என்னும்   நாமாக்கள் இப்பெருமாளை குறிக்கின்றன


                                                                         காரை கோவில்பத்து கோதண்டராமர்

தலம்வனம்நதிகடல்நகரம்தீர்த்தம்விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள தலம்எனவே சப்த புண்ணிய க்ஷேத்திரம் ஆகும் இவ்வமைப்புள்ள இடத்தில்தான் அஷ்டாக்ஷர மந்திரம் சித்திக்கும் என்பது சூட்சுமம்

திருப்புட்குழியில் வறுத்த பயிறுதிருப்பதியில் லட்டுஸ்ரீரங்கத்தில் அரவணை(பாயசம்கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்போன்று இங்கு   முனியோதரன் பொங்கல் சிறப்பு.



நிரவி கரியமாணிக்கப் பெருமாள்


முனையதரையன் பொங்கல்:  என்ற குறுநிலமன்னன் பெருமாளை    வணங்காமல்   உண்பதில்லை.   மன்னனுக்குத்    திறை கூட   செலுத்தாமல் அனைத்துப்   பொருளையும் நீலமேகப்பெருமாள்   திருப்பணியில் செலவிட்டதால் சிறைமன்னனின் கனவில் பெருமாள்   தோன்றி விடுவிக்கச் சொன்னதால் விடுவிக்கப்பட்டார்.  இரவில் வீடு   திரும்பியவருக்கு உண்பதற்குப் பொங்கல் மட்டுமே இருந்தது.  மானசீகமாகப் பெருமாளுக்குப் படைத்துவிட்டு உண்டார்மறுநாள்    கோயிலைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சிபெருமாளின்   உதட்டோரத்தில் பொங்கல்ஆலயம் எங்கும் பொங்கல் மணம்இன்றும்   அர்த்த சாமத்தில் முனியோதரன் பொங்கல் பெருமாளுக்குப்   படைக்கப்படுகிறது



 திருப்பட்டினம் ஸ்ரீ இரகுநாதப் பெருமாள்

முன் ஒரு காலத்தில் இவ்வாலயத்திற்கு ஏழு பிரகாரங்கள் இருந்துள்ளனசோழ மன்னன் ஒருவன் இங்கிருந்த மதில்களை இடித்துக் கற்களைக் கொண்டு சென்றான் சிவாலயம் கட்டஇதுகண்டு வெகுண்ட அறையர் என்னும்  பரமபக்தர்பொருவரை முன்  போர்   தொலைத்த   பொன்னாழி   மற்றொரு  கை”  என்பது    பொய்த்ததோ   என்று   தம்   கைத்தாளத்தைப்   பெருமானின் மீது விட்டெறிய,   பெருமாள்   தமது   பிரயோகச்   சக்கரத்தை ஏவி மன்னனைக் கொன்றார்.   இதனால்   இப்பெருமானின் நெற்றியில் தாளம் பட்டுப் புண்ணான  நெற்றி வடு”   இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை   இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில்   ஒன்றுதான்!


108 திவ்ய தேசங்களுள் மேலை வீடு திருவரங்கம்வடக்கு வீடு -  திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்என அமைந்த வரிசையுள் கீழை வீடாகத் திருக்கண்ணபுரம் திகழ்கின்றது! 




நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில்
தங்க கருட வாகனத்தில் கீழைக் கடற்கரைக்கு எழுந்தருளும்
சௌரிராஜப்பெருமாள்

இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால்   சொர்க்க வாசல் இல்லாத திருத்தலம்!. நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது இங்குள்ள நித்ய புஷ்கரணி!. உத்தராயண காலத்தில் மூன்று நாட்கள் இத்தீர்த்த்த்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கின்றனஇதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்ய பித்ரு தோஷம் விலகும்இந்திரன் இத்தலத்திற்கு வந்து நவக்கிரக பிரதிஷ்தை செய்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான்இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் இராஜகோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப்பார்த்தப்படி இருக்கின்றதுஇந்த நவக்கிரகம் சுற்றிலும் 12  இராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.


கடற்கரையில் தீர்த்தவாரி

மற்ற தலங்களில் அபயக் காட்சியோடு பெருமாள் இருப்பார்இங்குள்ள   பெருமாள் தானம் பெற்றுக் கொள்பவர் போன்று இருப்பார்இதன் பொருள் நம் கஷ்டங்களைப் பெருமாள் வாங்கிக் கொள்கிறார்!. மேலும் இவர் பிரயோக சக்கரத்துடன் சேவை சாதிக்கின்றார். இச்சக்கரம் பக்தர்களைக் காப்பதற்காக துஷ்டர்களை அழிக்க எப்போதும் தயாராக உள்ளது.  







மீன் வலைப் பந்தலில் சேவை சாதிக்கும்
 சௌரிராஜப்பெருமாள்







நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன்நின் நடையழகையும் காண வேண்டும் என்று வீபிஷணர்  வேண்ட, “கண்ணபுரத்தில் காட்டுவோம் வா என்று வீபீடணணுக்கு நடையழகு காட்டி அருளிய பெருமாள்! இன்றும் ஒவ்வொரு அமாவாசையிலும் மதியம் சௌரி முடியுடன் கைத்தல சேவையில்  நாம் நடையழகைக் காணலாம்

இத்தலத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் “ஸ்திதி காத்தருளும்” நிலையில் மஹாவிஷ்ணுவாகவும்இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும்,  மறுநாள் விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு!. இப்பிரமோற்சவத்தின் 4ம் நாள் இரவு கருடசேவை தந்தருளுகின்றார் சௌரிராஜப்பெருமாள். 8ம் நாள் பத்மினித்தாயாருடன் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.  

இக்கோவிலின் ஒரு சிறப்பம்சம்இத்தலத்தில் நான்கு தாயார்கள்  அருள் பாலிக்கின்றனர்உபய நாச்சியார்களான ஸ்ரீதேவிபூதேவியுடன்ஆண்டாளும்பத்மாவதி நாச்சியாரும் அருட் காட்சி தருகின்றனர்.

சௌரிராஜப் பெருமானிடம் திருமங்கையாழ்வார் மந்திர உபதேசம் பெற்றார்நன்றிக்கடனாக ஆழ்வார் பெருமானைக் குறித்துப் பாடிய பாடல்கள் 100. திருநறையூருக்கு அடுத்து (110) திருமங்கை ஆழ்வார் பதிகம் அதிகம் மங்களாசாசனம் செய்தது   இவரைத்தான்.  மேலும் நம்மாழ்வார்,  பெரியாழ்வார்குலசேகர ஆழ்வார்ஆண்டாள் ஆகிய ஆழ்வார்கள் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் இரண்டாவது மந்திரோபதேசம் இங்கு பெற்றார் அதை இவ்வாறு அவர் பாடுகின்றார்

மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
கற்றுநான் கண்ணபுரத்துறையம்மானே!
***********

புகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால்

சில புகைப்படங்கள் Anudinam.org வலைதலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 

 சௌரிப்பெருமான் மாசிமக கருட சேவை தொடரும்.............

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home