நீர்வண்ணர் கருடசேவை -2
இந்த திருநீர்மலை திவ்ய தேசத்தில் பெருமாளை சேவித்தால் நான்கு திவ்ய தேசப்பெருமாள்களை சேவித்ததற்க்கு சமம் என்று நான் சொல்லலீங்க திருமங்கையாழ்வார் சொல்லறாருங்க, அது ஏன்னு பார்க்கலாங்களா?
அன்றாயர் குலக்கொடியோடு
அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில்சூழ்
நன்றாய புனல்நறையூர்திருவாலி குடந்தை
தடம்திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்
மாமலையாவது நீர் மலையே.
அணிமாமலர் மங்கை சமேத நீர் வண்ணராகநின்ற கோலத்திலும்,
அதாவது நின்றான் திருநறையூர் நம்பியையும், இருந்தான் திருவாலி நரசிம்மரையும், கிடந்தான் திருக்குடந்தை கிடந்த ஆராவமுதனையும், நடந்தான் திருக்கோவலூர் கோபாலனையும் சேவித்த பலனை நல்குகின்றனர்.
 
  மாணிக்க சயனத்தில் சதுர்புஜ அரங்கநாதர்
மலைக்கோவிலுக்கு செல்ல சுமார் 200 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்  சிறு குன்றின் மேல் அருமையான கோவில். விமானம் தோயகிரி விமானம். கல்கி மண்டபம் கொடி மரம், மூன்று நிலை இராஜ கோபுர என்று எழிலாக விளங்குகின்றது மலைக் கோவில்.    பெருமாள் இத்தலத்தில்  பிருகு, மார்க்கண்டேயர், வால்மீகி, தொண்டைமான் ஆகியோருக்கு பிரத்யக்ஷம்.
 விமானம்: தோயகிரி விமானம்.
  தீர்த்தம் : மணிகர்ணிகா தடாகம், க்ஷீர புஷ்கரிணி, காருண்ய புஷ்கரிணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரிணி.
 மலைக்கோவில் தோற்றம்
மலைக்கோவில் தோற்றம் 
வரம்புருவ மதிசேர்
தொட்டு ஒருகால் அமரிலதிர
கதிர்நீள்முடி பத்தும் அறுத்தமரும்
நீலமுகில்வண்ணனெமக்கிறைவர்க்கு இடம்
மாமலையாவது நீர்மலையே
வால்மீகி முனிவர் அஞ்சலி ஹஸ்தத்துடன் நீர் வண்ணருடன் சேவை சாதிக்கின்றார்.
 
  
வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள். பங்குனி திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு  பிரம்மோற்சவம் நீர்வண்ணருக்கு, சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாக கொண்டு பிரம்மோற்சவம் அரங்கநாதருக்கு. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு தங்க கருட சேவை நீர்வண்ணரின் கருட சேவையை இப்பதிவில்  சேவிக்கின்றீர்கள் அன்பர்களே. 
 
 சொர்ண கருடனின் அந்த கம்பீரமும், பணிவும், கண்களில் தெரியும் பணிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கின்றது. அற்புதமான சேவை.
சொர்ண கருடனின் அந்த கம்பீரமும், பணிவும், கண்களில் தெரியும் பணிவும் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கின்றது. அற்புதமான சேவை.
 
கன்றின்பின் ஓடி வரும் தாய்ப்பசு போல பக்தர் துயர் தீர்க்க கருடன் மேல் பறந்து வரும் நீல முகில் வண்ணர்.
எப்போதும் போல் புகைப்படங்கள் உதவி திரு. தனுஷ்கோடி அவர்கள். நன்றிகள் அவரை கருட சேவைக்கு அழைத்து சென்ற திருமலை சுவாமிகளுக்கும்.







2 Comments:
அருமையான தரிசனம்.
சேவிச்சாச்சு. படங்களையும் சேமிச்சாச்சு.
நன்றி கைலாஷி.
நன்றி துளசி டீச்சர் அடுத்து வரும் கருட சேவை வைத்திய வீரராகவருடையது அதையும் வந்து சேவியுங்க.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home