Sunday, January 6, 2008

ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs
அசோக் நகர் கருமாரி திரிபுர சுந்தரி ஆலயம் - சென்னை

ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம்


தீபாவளியன்று காசியில் அன்னபூரணிக்கு லட்டுத்தேர் போல இவ்வாலயத்தில் அனுமனுக்கு வடைமாலை(1,00,008) தேர். இன்று (08.01.08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தரிசனம் செய்யலாம்.
விருப்பமுள்ள சென்னைவாசிகள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

சதயநாராயணர் ஆலயம் - சென்னை
வடைமாலை அலங்காரம்





வீணை மீட்டும் கோலத்தில் ஆஞ்சனேயர் வடை மாலை அலங்காரம்


அசோக் நகர் ஹனுமந்த வனம் விஸ்வரூப ஆஞ்சனேயர் வெள்ளி கவசம்
* * * * *


பஞ்ச முக விஸ்வரூப ஆஞ்சனேயர்



சுந்தர வில்லி ஏவ, சூழ்கடல் இலங்கை மேவி
அந்தமில் வீடு நல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
நந்தலில்லாத து‘தன் நம்மையும் அளித்துக் காப்பான்


ஸ்ரீயத்ர யத்ர ரகுநாத -கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத - ஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்


எங்கெங்கெல்லாம் ஸ்ரீ ராமருடைய புகழ் பாடப்படுகின்றதோ அங்கங்கு சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பக் கண்ணுடனும் தோன்றுபவர், அரக்கர்களுக்கு யமனைப் போன்றவர் வாயு புத்திரர் , அஞ்சனா தேவியின் மைந்தர், ஜானகி தேவியின் துன்பத்தை துடைத்தவர், வானர தலைவர், அக்ஷய குமரனை மாய்த்தவர், வாயு வேகமும் மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர், புத்திமான்களிற் சிறந்தவர், ஸ்ரீ ராம து‘தர், அனுமன் என்றும், ஆஞ்சனேயர் என்றும் வழங்கப்படும் மாருதி, இவரே வைணவ சம்பிரதாயத்தில் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.

சிரஞ்žவியான அனுமன் பாரத தேசமெங்கும் பல்வேறு ரூபங்களிலும் வணங்கப்படுகின்றார். சாதாரணமாக ராம பெருமானை கை கூப்பி வணங்கும் கோலத்திலே காட்சி தரும் இவர் சிலதலங்களில் சஞ்žவி மலையை ஏந்திய கோலத்திலும் , மற்றும் சில தலங்களில் கையில் சௌகந்தி மலரை ஏந்திய கோலத்தில் காட்சி தருகின்றார். பிரத்யேகமாக சில தலங்களில் வேறு அற்புதமான கோலத்தில் காட்சி தருகின்றார் அவற்றுள் சில அனந்த் மங்கலம் என்னும் திருத்தலத்தில் த்ரி நேத்ர தச புஜ ஆஞ்னேயர் (மூன்று கண்களும், பத்து கைகளும் கொண்ட வீர ரூபம்), திருக்குடந்தை இராம சுவாமி கோவிலில் உள்ள அனுமன் இராவணுடன் வாதம் செய்வது போல் அருள் பாலிக்கிறார். நாமக்கல் அடுத்த பேட்டையில் அனுமன் உடை வாள் தரித்து காட்சி தருகிறார். படை வீட்டில் உள்ள அனுமன் தனக்கு மிகவும் பிடித்த இராமாயணத்தை வாசிப்பது போல் காட்சி தருகின்றார். திருக்கடிகை என்னும் சோளிங்கரில் தனி மலையில் கையில் சங்கு சக்கரத்துடன் யோக கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நாமக்கல், சுதீந்திரம், சென்னை நங்கநல்லூர் ஆகிய் தலங்களில் நெடிதுயர்ந்து விஸ்வரூப ரூபத்தில் சேவை சாதிக்கின்றார். திருநள்ளார், திருவள்ளூர் முதலிய தலங்களில் பஞ்சமுக ஆஞ்சனேயாராகவும் நமக்கு அருள் பாலிக்கிறார்.



நளனுக்கு கலியின் கொடுமை நீங்கிய திருத்தலமான திருநள்ளாற்றிலே அமைந்துள்ள நள நாராயணப் பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பஞ்ச முக ஆஞ்சநேய சுவாமியைப் பற்றி அறிந்து கொள்ள என்னுடன் தங்களை சிறிது நேரம் அழைத்து செல்லுகின்றேன் வாருங்கள் . பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பகுதியில் காரைக்காலிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இத்தலம். நளனுக்கு நன்னெறி காட்டியதால் நள்ளாறு என்னும் பெயர் ஏற்பட்டது என்பர். மேலும் அரசலாறுக்கும் நு‘லாற்றுக்கும் நடுவில் இருப்பதால் இப் பெயர் வந்தது என்பர். இத்தலத்தில் நளன் தன் கலி தீர நீராடிய நள தீர்த்திற்க்கு எதிரே நள நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கலி தீர்ந்த பின் நள மஹாராஜா வழிபட்டதால் பெருமாளுக்கு இத்திருநாமம். மேலும் ஸ்ரீ நள புர நாயகித் தாயாருக்கும், விஜய கோதண்ட ராமருக்கும் தனி சன்னதி உள்ளது. இத்திருக் கோவிலில் உள்ள பஞ்ச முக ஆஞ்சனேயரைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோமா?




அனுமன், கருடர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர் என்ற ஐந்து முகங்களைக் கொண்டவராய் இங்கு அருள் புரிகின்றார் மாருதி. மேற்கு நோக்கிய அனுமன் முகமும், கிழக்கு நோக்கிய கருட முகமும், வடக்கு நோக்கிய நரசிம்ம முகமும், தெற்கு நோக்கிய வராஹ முகமும் விளங்க மேலே ஹயக்ரீவ முகத்துடனும், வலது திருக்கரங்களில் சஞ்žவி மலை, மழு, வாள், அமிர்த கலசம் தாங்கி அபய முத்திரையுடனும், இடது திருக்கரங்களில் ஏடு, பாசம், சௌகந்தி மலர், கேடயம். கதை தாங்கி மணியுடன் கூடிய வால் முன்னே தோன்ற நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார் மிகுந்த வரப் பிரசாதியான பஞ்ச முக ஆஞ்சனேயர்.




ஒவ்வொரு முகத்தால் நமக்கு பல வித நன்மைகள் விளைவிக்கின்றார் இவர். அவையாவன,



அனுமன் முகம் : சகல காரிய ஸ்த்தியளித்து, சனித் தொல்லையை நீக்கி, சகல தோஷங்களையும் போக்கி, எதிரிகளை அடக்கி காக்கின்றார்.






நரசிம்மர் முகம் : பில்லி சூனியம் பேய் பயக் கோளாறுகளை நீக்கி , துஷ்ட தேவதைகளை அடக்குகிறார்.






கருடர் முகம்: சரும நோய்களையும், விஷ நோய்களையும் , பழ வினை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் போக்குகின்றார்.






வராஹ முகம்: தீராத கடன் தீர்த்து செல்வம் பெருகச் செய்கின்றார். ஜுர ரோகம், விஷ ஜுரம், தீர்க்க முடியாத ரோகத்தையும், சகல வினைகளையும் பாவங்களையும் போக்குகின்றார்.






ஹயக்ரீவ முகம் : சகல கலைகள், படிப்பு, வாய் பேசாதிருப்பவர்களுக்கு வாக்கு வன்மை பெற செய்து சகல கலா வல்லவனாக்குகின்றார்.

இவருக்கு வாலில் மணி கட்டி வழிபட்டால் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன, சனிக்கிழமைகள் இவருக்கு மிகவும் உகந்த நாட்கள்.






இவரின் ஜன்ம தினமான மார்கழி அமாவாசை அன்று சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன அன்று அனைவருக்கும் நல்லாசி வழங்க இவர் வெளியே எழுந்தருளுகின்றார்.





திருவள்ளூரிலே பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது.




அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
என்று
மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ், தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொ காண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே நம்முடைய துன்பம் எல்லாம் விலகி விடும்.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home