Monday, January 7, 2008

ஹனுமத் ஜெயந்தி

Visit BlogAdda.com to discover Indian blogs


பெருமாளின் திருவடிகளை எப்போதும் தாங்குபவர்களில் முதல்வர் கருடாழ்வார் அவர் பெரிய திருவடி என்றும், இரண்டாவது மாருதி இவர் சிறிய திருவடி என்றழைக்கப்படுகின்றார்.


சிறிய திருவடியில் மலையப்ப சுவாமி


சூரிய பகவானின் சஞ்சாரத்தை பின்பற்றியே ஓடிக் கொண்டு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை கற்ற பேரறிவாளன் ஸ்ரீ இராம பக்த ஹனுமான்.


நேற்று (08-01-08) எடுகக்பட்டப் படங்கள்


ஒரு லட்சத்து எட்டு வ்டை மாலை தேர் அலங்காரம் முன்னழகு


வாயு புதரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்றவன், நித்திய பிரம்மச்சாரி மாருதி.

தேரில் அருள் பாலிக்கும் அனுமன்


அண்ணனால் விரட்டப்பட்ட சுக்ரீவனையும் சீதா தேவியை பிரிந்து அன்னையை தேடி வந்த இராமரையும் நண்பர்களாக்கியவன் சொல்லின் செல்வன் அனுமன்.


அனுமனுக்கு அருள் பாலிக்கும் இராம சீதா லக்ஷ்மணர்


தென்னிலங்கை சென்று தேவியைக் கண்டு கணையாழி கொடுத்து மாதாவின் துயர் தீர்த்து சூடாமணி பெற்று வந்த வீர தீரன் ஹனுமந்தன்



தேரின் பின்னழகு



இலக்குவன் மயங்கிக் கிடந்த போது சஞ்சிவி கொணர்ந்து அண்ணல் துயர் தீர்த்தவன் சங்கடஹரன். யுத்த களத்தில் இராம லக்ஷ்மண்ருடன் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டு வெற்றி பெற செய்தவன் அனுமன்.



தேரின் ஒரு பக்க அழகு



இராம தூதனாக சென்று இராவணனுக்கு அறம் உரைத்து , கற்பரசி சீதையை கவர்ந்து வந்த பாபத்திற்காக குலமெல்லாம் பூண்டுடனே கரியுமென சாபமிட்டவன் ஆஞ்சனேயன். இலங்கைதனை தன் வாலிலிட்ட தீயால எரித்து அழித்தவன் பஜ்ரங்கபலி.


அஞ்சலி ஹஸ்த அனுமன்





காகுத்தன் அருள் கொண்டு கதையதனை கையில் கொண்டு கஷ்டங்களை போக்கடிக்கும் கர்ம வீரன் சுந்தரன் அனுமன்.



வடை மாலை தேர் ஓளிப்படம்







பட்டாபிராமன் புகழைப் பாடிப் பாடி காலமெல்லாம் பரந்தாமானருளால் பரமபதமளிப்பவன் கதைதனைக் கையில் கொண்து கிங்கிணியை வாலில் கொண்டு ராம் ராம் என்று சொல்லும் ராம பக்தன் அனுமான்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home