Wednesday, January 30, 2008

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!

Visit BlogAdda.com to discover Indian blogs


சொல்லுவன்சொற்பொருள்தானவையாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன்நாரணனுக்கு இடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி
பல்லவன்வில்லவனென்றுஉலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.



திருமங்கையாழ்வார் பாடிய ஒரு பாசுரம், அந்த பரம் பொருளையே பாடிய ஆழ்வாரே அந்த ஆண்டவனுக்கு பணி புரியும் அன்பர்களை போற்ற வேண்டும் என்று பல்லவன் பரமேஸ்வரனை பாராட்டி காட்டியுள்ளார்.

எதற்காக இந்த பீடிகை என்று ஆச்சிரியப்படுகின்றீர்களா? வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக செயல்படும் சீனா ஐயா அசை போடுவது அவர்கள் ஆன்மீகப் பதிவாளர்களை அடையாளம் காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறத்தான்.

அவருக்கு மட்டுமா நன்றி ? சிவமுருகனுக்கும் தான். பிளாக எப்படி உருவாக்குவது, Unicode என்பது என்ன என்று தெரியாத போது, அவரது பிளாக் மதுரை கண்டு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது அதற்கு உடனடியாக பதில் கொடுத்து பிளாக் எழுத உதவிய குருநாதர் அவர் . அவருக்கும் நன்றி.

சக தொண்டர்களுள் "வாரம் ஒரு ஆலயம்" நடராஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ஐயனின் புகழை அனைவரிடத்தும் பரப்ப "கற்றலில் கேட்டலே நன்று" என்று podcast வழியை தேர்ந்தெடுத்ததற்காக.

அடுத்து "மாதவிப்பந்தல்" கண்ண பிரான் ரவி ஷங்கர் (KRS) மாதவிப் பந்தல் அவர்கள் தமிழ் இவர் கையில் மட்டும் எப்படி அப்படி வளைந்து கொடுக்கின்றது என்று ஆச்சிரியப்படவைக்கும் பதிவுகள் அத்தனையும் அருமை.

"ஆழ்வார்க்கடியான்" N. கண்ணன் ஆழ்வார்க்கடியான்ஆழ்வார்களின் வேத சாரத்தை அழகிய தமிழில் இயம்பும் அன்பர்.

ஐயனின் திருக்கயிலாய யாத்திரை மற்றும் ஆனந்தக் கூத்தரின் தில்லை அம்பலத்தை அருமையாக ஆராய்ந்து எழுதும் கீதா சாம்பசிவம் ஆன்மீகப் பயணம் அவர்களுக்கும் நன்றி.

மற்றும் தமிழில் பதிவு இடும் குறிப்பாக ஆன்மீகப்பதிவு இடும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. அடியேனுடைய பதிவுகளில் படங்கள் அதிகமாக உள்ளதாக சிலர் குறிப்பால் உணர்த்தினர். ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாததை ஒரு படத்தால் உணர்த்தி விடலாம் என்பதால்தான் படங்களை அதிகமாக பயன்படுத்துகின்றேன். நாம் வீட்டில் இருந்தே ஆண்டவனை வணங்கலாம் என்றாலும் திருக்கோவில்களுக்கு செல்வது அவரது திவ்ய தரிசனத்தைப் பெறுவதற்காகத்தானே. என்வே "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று படங்களை அதிகம் பயன் படுத்தினேன் இனி குறைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றேன். பதிவுகளில் பெரும்பாலக என்னுடைய படங்களையே பயன்படுத்துகின்றேன் ஆயினும் சில சமயங்களில் மற்ற பதிவர்களின் படங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றேன் (சுட்டு) அதாவது அவர்கள் அனுமதி பெறாமல் . அதற்காக மன்னிப்பும் அதே சமயம் நன்றியும்.

ஆன்மீகப் பதிவுகள் ஆனாலும் க்டல் கடந்து சென்ற பின்னும் வந்து த்ரிசித்து பின்னூட்டமும் இட்டு மேலும் எழுத உற்சாகம் அளித்த அன்பர்களுக்கும், வந்து தரிசித்த அன்பர்களுக்கும் நன்றி.


பாராட்டிய சில அன்பர்கள்:



வடுவூர் குமார் கட்டுமானத்துறை
குமரன் கோதை தமிழ்
என்றும் அன்புடன் பாலா தமிழ் உலா
துளசி கோபால் துளசி தளம்
அபி அப்பா அபி அப்பா
T.R.C கௌசிகம்
மதுரையம்பதி மதுரையம்பதி
expatguru Madras Thamizhan
VSK ஆத்திகம்
kalyanji பகவத் கீதை
கோவி.கண்ணன் கோவி கண்ணன்

நிறைவாக ஒரு வேண்டுகோள் அன்பர்களே குறைகள் ஏதாவது கண்ணில் பட்டால் அதைக் கட்டாயம் சுட்டிக் காட்டுங்கள் அவற்றை திருத்திக் கொள்வதற்காக.


அடியேன் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றி ஒரு நூல் தமிழில் எழுதியுள்ளேன் அதன் பிரதியும், யாத்திரையின் - Videoம் வேண்டும் அன்பர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்பி வைக்கிறேன்.


அன்பன்
(கைலாஷி)
சு.முருகானந்தம்
muruganandams@rediffmail.com

1 Comments:

Blogger cheena (சீனா) said...

என்ன என்ன இது - எனக்கு நன்றி யா - அதற்கு ஒரு பதிவா- நம்ப முடியவில்லை. நன்றி நன்றி நன்றி - என்ன மறு மொழி இடுவது தெரியவில்லை,

February 2, 2008 at 4:14 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home