ஸ்ரீநிவாசர் கருட சேவை
பொன்மலை மேல் கரும்புயல்

இனி கருட சேவையின் தத்துவ விளக்கம் என்ன என்று காண்போம். " தாஸ:, ஸகா, வாஹனம் ". என்றபடி பெருமாளுக்கு
1. சேவை புரியும் அடிமையாக, எப்போது அவரது திருவடிகளை தாங்கி இருக்கின்ற பெரிய திருவடியாகவும்.
2. தோழனாகவும், எப்போதும் பெருமாளின் அருகில் இருப்பவர். ஆழ்வார்கள் இதனால் கருடனை காய்சினப்பறவை என்று குறிப்பிடுகின்றனர்.
பவளநண்படர்க்கீழ்சங்குறைபொருநல்
தண்திருப்புளிக்கிடந்தாய்!
கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக்
காய்சினப்பறவையூர்ந்தானே!
ஸ்ரீநிவாசர் கருட சேவை அருகாமையில்

காய்சினப்பறவையூர்ந்து பொன்மலையின்
மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமானென்று
அங்குஅவர்படக்கனன்றுமுன்நின்ற
காய்சின வேந்தே! கதிர்முடியானே!
கலிவயல்திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்கு வாள் வில்
தண்டேந்தி எம்மிடர்கடிவானே!
கோபப்பறவையான கருடனில் ஒய்யாரமாக அமர்ந்து ஜிவ்வென்று பறந்து பெருமாள் வரும் அழகானது பொன் மலை மீது ஒரு கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். எம்பெருமானும் கோபமாக சென்று தன் எதிரிகளி அளிப்பவன், தீ உமிழும் கோப சக்கரமும், சங்கும், தண்டமும் ஏந்து பக்தர்கள் துன்பங்களைக் களைபவன்.
ஆழ்வார்கள் மட்டுமா? முருகனை ( மால் மருகனை)ப் பாடிய அருணகிரி நாதரும் இவ்வாறு பாடுகின்றார்.
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென...
கருடன் மேல் ஆரோகணித்து வருகின்ற கருமேகப் புயல் என்று அருணகிரி நாதரும் பாடுகின்றார். ஆகவே கருட சேவைப்பதிவுகளைப்பார்க்கும் போது இப்படி கற்பனை செய்து பாருங்கள் அந்த ஆனந்தம் உங்களுக்கு புரியும்.
3. வாகனமாகவும் கொடியாகவும் விளங்குபவர்தான் கருடன்.
எம்பெருமானின் ஆசனமும் கருடன். எங்கே பெருமாள் செல்ல வேண்டுமென்றாலும் தயார் நிலையில் அமர்ந்திருப்பவர். ஆதீ மூலமே என்று கஜேந்திரன் அலறிய மறு நொடி இந்த ஓடும் புள்ளேறி( பறவை) எம்பருமான் யாணைக்கு மோக்ஷம் கொடுக்க பறந்து வந்தான். இது எம்பெருமான் எப்போதும் தன் பக்தர்களுக்கு உதவ காத்திருக்கும் எளிமையைக் குறிக்கின்றது.
குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக்
கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று
நிலத்திகழும்மல்ர்சுடரேய்சோதீ! என்ன
நெஞ்சிடர்தீர்த்தருளிய என்நின்மலன் காண்மின்
என்று பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.
இக்கதையை படிக்க சொடுக்குக இங்கே.
தங்க கருடன்- பொன் மலை

சுருளக்கொடியொன்றுடையீர்!
புள்ளூர் கொடியானே
சுருளப்புட்கொடி சக்கரப்படை வான நாடன்.
எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்( நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான். இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும் எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
கருட சேவை பின்னழகு

கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி புறப்பாடு

கருட சேவை இன்னும் தொடரும்.............