Monday, September 15, 2008

அரவப் பகையோன்

Visit BlogAdda.com to discover Indian blogs
அனந்த பத்மநாப சுவாமி கருட சேவை



புரட்டாசி நிறை சனிக்கிழமை




மாசி பிரம்மோற்ஸவம்





பெரியாழ்வார் தம் பல்லாண்டில் பெருமாளை "பையுடை நாகப்படைக் கொடியான" என்று மங்களாசாசனம் செய்துள்ளார். அதாவது நாகங்களின் பகைவன் கருடன் ஏனென்பதை நாம் அறிவோம், தனது தாய் அடிமையாக காரணமாக இருந்தவை நாகங்கள் என்பதால் மாற்றான் தாய் மக்கம் என்றாலும் நாகங்கள் கருடனுக்கு பகை. ஆகையால் கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.




நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம்பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன்.



"ககநகர கனககிரி கரிமதர நிகம்மய
நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந"



என்று ஸ்வாமி தேசிகன் இவ்வைபவத்தை கூறுகின்றார்.




பரம பக்தனான ப்ரகலாதனை கடிக்க ஹிரண்யகசிபு பாம்புகளை ஏவிய போது அப்பாம்புகளை துரத்தியவர் கருடன்.




பாம்பின் விஷத்தை நீக்கும் சக்தி கருடன் இறகு வீசும் காற்றுக்கு உண்டு.



பாம்பு தீண்டி இறந்த தில்லை வாழ் அந்தண சிறுவன் கம்பர் தமது இராமாயணத்தில் நாக பாச படலத்தை படித்தவுடன் உயிர் பெற்று எழுந்தான் என்று கூறுவர்.




எதிரிகளை வெல்ல, விஷங்களை முறிக்க, மந்திர தந்திர தீய சக்திக்ளை ஒடுக்க கருட மந்திரத்தை ஜபிக்கலாம்.




பாண்டவர்கள் முதலில் கருட வியூகம் அமைத்தபோது தான் வெற்றி பெறுகின்றனர்.




கார்கோடகன் என்னும் நாகத்தை மாலையாக அணிந்துள்ளதால் கருடன் சனி பகவானின் விளைவுகளை தடுக்கிறார்.




விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன். அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும் ஆபரணங்கள் எல்லாம் பாம்பு. குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது. .




விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம்
அவன் மடிமேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு தலைமேலது
பாம்பு இறை தலையன
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு -
பரிபாடல்









கருடனின் மேனியை அலங்கரிக்கும் அஷ்ட நாகங்கள் இவை




வலது கங்கணம் - குளிகன்



இடது கங்கணம் - அனந்தன்



உதர பந்தனம் - வாசுகி



அரைஞாண் - தட்சன்



மாலை : கார்கோடகன்



வலது குண்டலம் - பத்மா



இடது குண்டலம் - மஹா பத்மா



கிரீடம் - சங்க சூடன்






இவ்விரண்டு படங்களில் தெளிவாக கருடனின் ஆபரணமாக நாகங்கள் விளங்குவதை காணலாம்




கருடன் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் உடையவர். ஏழு ஸ்வரங்கள் உடைய ஸாம வேத வடிவானவர். அனிமா- உடலை சிறிதாக்குதல், மஹிமா- உடலை பெரிதாக்குதல், லகிமா-உடலை லேசாக்குதல், கரிமா- உடலை பளுவுடையதாக்குதல், வசித்வம்- எல்லாவற்றையும் தன்வயமாக்குதல், ஐஸ்வர்யம்- எல்லாரையும் அடக்கியாளும் தலைவனாய் இருத்தல், பிராப்தி- தான் நினைத்ததைப்பெறுதல், ப்ரகாமம்- நினைத்தவிடம் செல்லுதல் என்னும் அஷ்டமா சித்திகளும் அடையப் பெற்றவர். இவரின் மேல் ஆரோகணித்துத்தான் பெருமாள் நம் துயர் துடைக்க கொற்றப்புள் ஏறி வருகின்றார்.


**********************


கருட சேவையின் அடுத்த பதிவு வெள்ளிப்பதிவு அதாவ்து 25வது பதிவு, அடியேன் இத்தொடரை ஆரம்பிக்கும் போது இவ்வளவு பதிவுகள் எழுத முடியுமென்று நினைக்கவில்லை கை வசம் இருந்தவை திருநாங்கூர் 11 கருட சேவையின் புகைப்படங்கள் மற்றும் சில திருக்கோவில்களின் கருட சேவை படங்கள் மட்டும்தான். செல்ல செல்ல பெருமாளே பல விஷயங்களை அடியேன் கண்ணில் பட வைத்தார் ஆகவே 25வது பதிவை ஒரு சிறப்புப்பதிவாக பதிய ஐயன் பணித்தார்.





இரண்டு சிறப்புக்கள் அப்பதிவில் இருக்கும் முதலாவதை அடியேனே சொல்லிவிடுகின்றேன், இரண்டாவது என்னவென்று ஊகித்து சொல்லுங்கள் அன்பர்களே.



முதலாவது சிறப்பு: கவிதாயினி கவிநயா அவர்கள் ஒரு சிறப்பு கவிதை எழுதித் தர ஒத்துக் கொண்டுள்ளார். எனவே கருட சேவையின் வெள்ளிபப்திவு அவர் கவிதையுடன் வெளி வரும் .





அடுத்த சிறப்பு என்ன அன்பர்களே? யோசித்துப் பார்த்து சொல்லுங்கள் இல்லையென்றால்



பொறுத்திருங்கள்.

ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்

Visit BlogAdda.com to discover Indian blogs
குட்டத்து கோல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த
சக்கரத்தார் ஸ்ரீநிவாசர் (closeup)



முன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.



ஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்

எழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்

பூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்.



ஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்

ஓடும் புள்ளேறி

சூடும் தண் துழாய்

நீடு நின்று அவை

ஆடும் அம்மானே

பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்

படங்களுக்கு நன்றி - http://www.svdd.com/

கஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே

கஜேந்திர மோட்சம்