Tuesday, April 22, 2008

சித்திரை பிரம்மோற்சவ கருட சேவைகள்

Visit BlogAdda.com to discover Indian blogs
சித்திரை திருவோண நாளை தீர்த்த நாளாகக் கொண்டு பல்வேறு பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை பெருமாள் கருட சேவை சாதிக்கும் இரண்டு தலங்களில் இன்று கருட சேவையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அந்த அற்புத சேவையை தாங்களும் கண்டு களியுங்கள்.

ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் தங்க கருட சேவை
திருவல்லிக்கேணி திவ்ய தேசம்



கருட சேவை பின்னழகு

பார்த்த சாரதி சுவாமி ஏகாந்த சேவை











பின்னழகு


கோடைக்காலம் என்பதால் சுவாமிக்கு வெப்பம் அதிகமாகக் கூதாது என்று சிரத்தையுடன் சந்தனம் சார்த்தியிருக்கின்ற நேர்த்தியைப் பாருங்கள்.




சைதாப்பேட்டை ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள்
அந்த இரண்டு தலங்களில் முதலாவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தங்க கருட சேவை. இரண்டாவது சென்னை சைதாபேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் ஆலயத்தின் கருட சேவை. ஆம் இத்தலத்தில் பெருமாள் வேங்கடவராகவும் நரசிம்மராகவும், உபய நாச்சியார்களுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.


பிரம்மோற்சவம் ஒன்றாக நடைபெறும் இந்த இரண்டு திருகோவில்களுக்கும் இனி ஒரு சம்பந்தமும் உண்டு. தை மாதத்தில் திருவூரல் உற்சவத்திற்க்காக ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் இத்தலத்திற்கு விஜயம் செய்கின்றார். பின்னர் இரு பெருமாள்களும் ஒன்றாக மாட வீதி வலம் வருகின்றனர்.

கருடனின் கண்களில் ஒரு ஒளி வட்டம் தெரிகின்றதா? ஆம் கூர்ந்து கவனியுங்கள் நிச்சயம் தெரியும் ஏனென்றால் அவை கண்ணாடி குண்டுகள். வாகனங்கள் செய்த காலத்தில் சிறப்பாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த சிறப்பு குண்டுகள் அனைத்து வாகனங்களிலும் பதிக்கப் பட்டனவாம்.

வேங்கட நரசிம்மர் அனுமந்த வாகன சேவை


மூன்றாம் நாள் இரவு பெருமாள் அனுமந்த் வாகனத்தில் பெருமாள் சேவை சாதிக்கும் போது சிறிய திருவடிக்கு வடை மாலை சார்த்துவது இத்தலத்தின் சிறப்பு.

Labels: , , , ,

Saturday, April 12, 2008

எந்த ருசிரா ராமா ஏமி ருசிரா! நீ நாமம்

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீராம நவமி


சத்ய நாராயணப் பெருமாள்

இராம பட்டாபிஷேக கோலம்








ஸ்ரீ ராம நாம மகிமை




கௌசலை தன் திருமகனாய் ஸ்ரீ ராமன் அவதரித்த ராம நவமி தினமான இன்று ராம நாமத்தின் மகிமையைப் பற்றி படிப்போம். இராம பட்டாபிஷேக காட்சிகளை கண்டு மகிழ்வோம்.




கிடைப்பதற்கரிய இந்த மானிடப்பிறவியை நாம் எடுத்தது பகவத் பக்தி செய்து சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, முக்தி என்னும் இறைவனோடு ஒன்றுவதுதான் என்பது நமது சநாதன தர்மத்தின் அடிப்படையான கொள்கையாகும். இவ்வாறு பிறப்பு, இறப்பு என்னும் இந்த சக்கரத்திலிருந்து விடுபடுவதற்கு பகவத் பக்தியென்னும் கருவியே சாலச் சிறந்ததாகும். பக்தி ஒன்பது வகைப்படும்.





1.ச்ரவணம் -கேட்டல் - ஸ்ரீபரிஷத் மஹாராஜா




2. கீர்த்தனம் - புகழ் பாடுதல் - ஸ்ரீ சுகர்




3.ஸ்மரணம் - மனத்தால் சிந்தித்தல் - பிரகலாதன்




4.பாதஸேவனம் - திருவடி பிடித்து அடிமை கொள்ளல் - ஸ்ரீ மஹா லக்ஷ்மி




5.அர்ச்சனம் - புஷ்பம் கொண்டு அர்சித்தல் - ஸ்ரீ பரத சக்ரவர்த்தி




6.வந்தனம் - ஸாஷ்டாங்க வர்தம் - ஸ்ரீ அக்ரூரர்




7.தஸ்யம் - தாசனாக இருந்து பணி புரிதல் - ஆஞ்சனேயர்




8.ஸக்யம் - நண்பனாக இருந்து பழகுதல் -அர்ச்சுனன்




9.ஆத்ம வேதனம் - ஸ்ரீ பலிச் சக்கரவர்த்தி





இவற்றுள் ஸ்மரணம் என்ப்படும் நாம சங்கீர்த்தனத்தால் பக்தியின் உறுதியான நிலையையுண்டு பண்ண வல்லது என்பது நம்து முன்னோர்களான முனிபுங்கவர்கள் கண்ட உண்மையாகும். நாரதர், பிரகலாதன், துருவன் ஆகிய பரம பாகவதர்களின் வரலாறுகள் இந்த உண்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிப் போல் உணர்த்துகின்றன.





நாம ஸ்மரணம் செய்ய எண்ணற்ற நாமாக்கள் உள்ளன அவற்றுள் தாரக மந்திரமான ஸ்ரீ இராம நாமாவின் மகிமையை காண்போம்.









கோதண்ட ராமர்



இராம நவமியன்று இரவு



ராம பட்டாபிஷேக சேவை



இராமாயண கீர்த்தனையென்னும் நூலில் அருணாசலக்கவிராயர் இந்த இராம நாமத்தின் சிறப்பபை வெகு அழகாக உருவகம் செய்துள்ளார். "திருந்தும் நம: சிவாய நாராயணா என்று ஜபிக்கு மந்திரம் இரண்டும் மெய்தானே உரைக்கும் மந்திரமிரண்டில் இரண்டாம் எழுத்திரண்டும் ஒரு இராமனாகி வந்த பெருமானே" என்று பெருமிதத்துடன் புகழுகிறார்.




இராம பெருமான் பிறந்த போது வசிஷ்டரை பெயரிட தசரதர் வேண்ட " ஓம் நமோ நாராயணாய", ஓம் நமசிவாய என்ற அஷ்டாக்ஷரம், பஞ்சாக்ஷரம் இவையிரண்டிலும் அமைந்துள்ள இரண்டாம் அக்ஷரமான 'ரா' , 'ம' இரண்டு அக்ஷரங்களை இனைத்து அஷ்டாக்ஷர, பஞ்சாக்ஷர மந்திரங்களின் உயிர் நாடியாக இராம என்று நாமமிட்டார்.


எத்தனை முறை தரிசித்தாலும் திகட்டாத அழகு இராமன்








இந்த மந்திரத்திலுள்ள "ராம" என்ற இரண்டு அக்ஷரங்களை நாம் நீக்கினால் அஷ்டாக்ஷரம், மற்றும் பஞ்சாக்ஷரம் இரண்டும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். அதாவது 'நாராயண' என்ற வாக்கியத்தில் ராவை நீக்கினால் 'நாயணா' அதாவது ந அயநாய என்று மாறும். அயநம் என்ற பதத்திற்க்கு மோக்ஷம், கதி என்ற பொருள்களுண்டு. எனவே மோக்ஷம் இல்லை என்று பொருள் கிடைக்கும். அது போல 'நம: சிவாய' என்னும் வாக்கியத்திலுள்ள 'ம:' என்ற எழுத்தை நீக்கிவிட்டால் அந்த வாக்யம் 'நசிவாய' என மாறிவிடும். அப்பொழுது 'சிவாய' மங்களத்தின் பொருட்டு 'ந' இல்லை. அதாவது மங்களமில்லை என்பதாகும்.எனவே இந்த இரண்டு மந்திரங்களின் சிறப்பான பொருளும் இந்த இரண்டு அக்ஷரங்கள் இல்லாது போனால் குலைந்து விடும். இவைகளை எவரும் ஜெபம் செய்யமுடியாது.இவ்வாறு வைணவம், சைவம் என்னும் இரண்டுக்கும் பொதுவாக , மையமாக அமைந்த காரணத்தால் நம் முன்னோர்கள் இந்த 'ராம' என்னும் மந்திரத்தை தாரக மந்திரம் என்று பெருமையுடன் போற்றி ஜபம் செய்து வந்தனர்.






தாரகம் என்னும் சொல் ப்ரணவத்தையும், கடத்தல் என்ற பொருளையும் காட்டும். எனவே பிறவிக்கடலைக் கடக்க இந்த இராமநாம தாரகம் என்னும் தோணியே சிறந்தது.





இந்த இராம நாமத்தின் சிறப்பை உணர்ந்து ஜபம் செய்து வந்தால். அந்த ஜபத்தினால் உண்டாகும் அளவற்ற பயன்களை, நமது முன்னோர்களாம முனிகளும், பரமாசார்யர்களும், பலப்படியாக போற்றிப் புகழ்ந்துள்ளதை பல் வேறு பக்தி நூல்களில் விஸ்தாரமாக காணலாம். அதனாலன்றோ தியாகய்யரும் "எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா" என்று பக்தி ஒழுக பாடிப்ப்ரவினார் அந்த இராகவனின் நாமத்தை.



அன்னை ஆதி பராசக்தி அன்று நால்வருக்கு அறம் உரைத்த ஆதிகுருவைப் பார்த்து வினவுகின்றாள்










கேனோயாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸகஸ்ரகம்



பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ







ஐயனே விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் பாராயணம் செய்ய எளிமையான வழி என்ன என்று?









ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே



சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே








(வனப்புடன் விளங்கும் வதநத்தையுடையவளே! அழகிய திருமேனியுடையவளே! மனதை கவருகின்றவளே! ஸ்ரீ ராம ராம ராம என்று மனதிற்கு இனிமையாயுள்ள ராமனிடத்தில் இன்பம் கொள்ளுகின்றேன். இந்த 'இராம நாமம்' சஹஸ்ர நாமத்திற்கு ஒப்பாக விளங்குவதாகும் என்று அன்றாலின் கீழ் அமர்ந்து சொல்லாமல் வெறும் சின் முத்திரையால் உண்மைப் பொருளை நால்வருக்கு உணர்த்திய ஸ்ரீ பரமேஸ்வரன் ராம நாமத்தின் சிறப்பை விளக்குகின்றார். )






யதா வர்ணயத்கர்ண மூலேந்த காலே சிவோராம ராமேதி ராமேதி காச்யாம்ததேகம்பரம் தாரகம் ப்ரஹ்மரூபம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்

பரம பவித்திர இறக்க முக்தித்தலமான காசிசேக்ஷத்திரத்தில் ஜ“வன்கள் சரீரத்தை விடும் போது, ஸ்ரீ விஸ்வநாதர் அவர்களுடைய வலது செவியில் அந்த ஸ்ரீ ராமனுடைய தாரக மந்திரமான "ராம ராம" என்னும் திருநாமத்தை உபதேசம் செய்கின்றார். அந்த ஸ்ரீராமனை, புண்ய புருஷோத்தமனை, சர்வோத்தமனான ஸ்ரீ ராமனை, ஜனன மரண துக்கத்தின் போது நம்மைக் காக்கும் தாரக பிரம்ம ரூபியுமான இராமனை நான் வணங்குகின்றேன் என்று பகவத் பாதாள் இராமனின் சிறப்பைப் பாடுகின்றார்.










இரத்னாகரன் என்ற வேடன் ராம நாமத்தை இடைவிடாது ஸ்மரணம் செய்து வால்மீகியானார்.
இராம நாம பாராயணத்தால் தீராத நோய்கள் தீரும், நீண்ட ஆயுள் சித்திக்கும், பகை ஒழியும், குடும்பச் சச்சரவுகள் நீங்கும், எடுத்த காரியங்கள் கைகூடும், தெய்வீக சக்தி ஏற்படும். எப்பேர்பட்ட பாவமும் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் கூட நலம் பெறுவார்கள்.






மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்





தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே





இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்





செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.













நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே





திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே





ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே





இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்





என்கிறார் கம்பநாட்டாழ்வாரும் இராம நாமத்தின் மகிமையை.








ராமதாபிநீ உபஷத், ராமரகஸ்யோபஷத், முக்திபஷத் முதலிய உபஷத்களில் இராம நாமத்தின் பெருமை விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீராமநாம தாரக மந்திரத்தை ஜப்ம் செய்து வந்தால் இவ்வுலகில் சகல நன்மைகளையும் பெருவதோடு, முடிவில் ஸ்ரீராம ஸாம்ராஜ்யமாம் அழியாப் பேரின்ப நிலையை அடையாலாமென்பது உறுதி.





இராமாயணத்தை கையில் ஏந்திய கோலத்தில்
அருள் பாலிக்கும் அஞ்சனை அரும்புதல்வன்














எங்கெங்கு இராமன் புகழ்ப் பாடப்படுகின்றதோ அங்கெல்லாம் அரக்கர்களுக்கு எமனைப் போன்ற வாயு புத்திரர் சிரஞ்žவி அனுமான், சிரமேற் கூப்பிய கரங்களுடன், ஆனந்தபாஷ்பக் கண்களுடன் தோன்றுகிறார்.







சதாசிவ பிரம்மேந்திரர் தமது பாடல் ஒன்றில் இராம நாம சிறப்பை இவ்வாறு பாடுகின்றார். " ஏ நாக்கே! 'ராம' என்னும் அமுதத்தைப் பருகுவாய். ராமன் என்னும் சுவையைப் பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழ ரசங்களால் அது ரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். யமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களுக்கும் சாரமாக இருப்பது ராம நாமமே. ராமனின் நாமமே உலகைப் பாதுகாக்குகின்றது. வெளிவேஷக்காரர்களையும், நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நீயும் பருகுவாயாக."


இராம பட்டாபிஷேக புறப்பாடு






இராம நாமம் எல்லா நன்மைகளின் இருப்பிடம், கலி தோஷம் நீக்கும், எல்லா வளங்களையும் வழங்ககும் பரமபதத்தினை நல்கும்.






ராமஸ்மரணாதந்த யோபாயம்நஹ’ பச்யாமோ பவ தரணே!
என்றபடி ஸ்ரீ ராமனுடைய சிந்தனை ஒன்றைத் தவிர பிறவிக் கடலைக் கடப்பதற்கு வேறு உபாயம் ஒன்றும் இல்லை எனவே








வைதேஹி-ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹா-மண்டபே


மத்த்யே புஷ்பக-மாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திகம்


அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன-ஸுதே தத்வம் முனிப்ப்ய்: பரம்


வ்யாக்க்யாந்தம் ப்ரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்





கற்பக விருக்ஷத்தின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு சீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும், முன்னிருந்து ஆஞ்சனேயர் கேட்கத் தத்துவத்தை முனிவர்களுக்கு விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணரும் ஆன ஸ்ரீராமசந்திர மூர்த்தியை "ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம" என்று போற்றி நன்மை அடைவோமாக.








நிறைவாக இராமனுக்கு மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவ்னே, என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ ! என்று ஸ்ரீ ராமனுக்கு தாலாட்டுப் பாடிய குலசேகராழ்வார் பாசுரம் ஒன்று






அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி


அடலரவைப் பகையேறி அசுரர்தம்மை வென்று


இலங்குமணிநெடுந்தோள் நான்கும் தோன்ற


விண்முழுதும் எதிர்வரத் தன்தாமம் மேவி


சென்றுஇனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்


தில்லைநகர்த் திருசித்திரகூடந்தனுள்


என்றும்நின்றான் அவன்இவன் என்றுஏத்தி நாளும்


இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர்! நீரே.







இராம பட்டாபிஷேக புறப்பாடு



வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:

காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்த்தா

அப்யஷிஞ்சத் தரவ்யாக்கரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா

ஸலீலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம்ய யதா


( வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயனர், கௌதமர், ஸுயக்ஞர்,விஜயர் ஆகிய மஹரிஷிகள், நறுமணம் நிறைந்த தூய தீர்த்தத்தால் இந்திரனை வஸுக்கள் அபிஷேகம் செய்தவாறு மானிட சிரேஷ்டரான ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.)


ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
* * * * * * * * *

Labels: , , ,

கோதண்ட ராமரின் அருட் கோலங்கள்

Visit BlogAdda.com to discover Indian blogs
அன்பர்கள் அனைவருக்கும் " இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்" பிறக்கின்ற சர்வதாரி ஆண்டு மங்களமானதாகவும், சிறப்பாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்

சித்திரை பௌர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ ராமருக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது பிரம்மோற்சவத்தின் சில அருட்காட்சிகளும் மற்றும் மற்றைய உற்சவங்களின் சில அருட்காட்சிகளும் இப்பதிவில்.




ஸ்ரீ இராமர் அனுமந்த வாகனம்






கோதண்ட இராமர் சந்திரப் பிரபை



தை அமாவாசை லக்ஷ தீபம்





தேரிலிருந்து திரும்பும் ஸ்ரீ இராமர்







இராமர் திருத்தேர்



ஸ்ரீ இராமர் கருட சேவை


புன்னை மர வாகன சேவை

சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் பாடிய
பட்டைப் பணிந்தருளாயே பாசுரம் சேவித்து ஸ்ரீ இராமரை சேவிப்போம்.


வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட நாதர் கோலம்



புஷ்ப பல்லக்கு


நாளை ஸ்ரீ ராம நவமி.
இராம நாம மகிமையும்
பட்டாபிஷேக கோலங்களும்
சேவிப்போம்.

Labels: , , ,

Thursday, April 10, 2008

தக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்

Visit BlogAdda.com to discover Indian blogs

ஸ்ரீ கோதண்ட இராமர்


தருமமிகு சென்னையின் ஒரு பகுதிதான் முற்காலத்தில் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மாம்பலம். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது இந்த பகுதியில் ஒரு பெரிய குகை இருந்தது எனவே அது மாபிலம் என்றே அழைக்கபட்டது ( பிலம் என்றால் குகை), அதுவே பின்னர் மருவி மாம்பலம் ஆயிற்று.





இப்பகுதியில் பல்வேறு புராதானக் கோவில்கள் அமைந்துள்ளன, அவற்றுள் ஒன்று தான் நாம் இக்கட்டுரையில் காண உள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில். மேற்கு மாம்பலத்தில் மேட்லி பாலத்திற்கு தெற்கே அமைந்துள்ளது இக்கோவில். தக்ஷிண பத்ராசலம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில்.

முதலில் பத்ராசல இராமன் வைபவம்: இராமதாசர் ஹைதராபாத் திவானிடம் பணி செய்து வந்தார். அவர் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு பத்ராசலத்தில் இராம பெருமானுக்கு ஒரு சிறந்த கோவிலைக் கட்டினார். அதனால் திவான் அவரை சிறையில் அடைத்தார். சிறையில் வாடிய இராமதாசர் அந்த ஸ்ரீ இராமனையே சரண் என்று அடைந்தார். இராமா உனக்காக கோவில் கட்டியதற்கு கிடைத்த பலன் இது தானா? எத்ற்காக எனக்கு இந்த தண்டனை என்று மனமுருகி வேண்டி நின்றார். தன் அன்பன் சிறையில் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த இராமனும் இலக்குவனுமே அந்த பணத்தை இரு வாலிபர்களாக வந்து திவானிடம் திருப்பித்தர, உண்மை உணர்ந்த திவான் இராமதாசரை விடுதலை செய்தார். ஸ்ரீ இராமரின் பரிபூரண கடாட்சத்திற்க்கு ஆளான பக்த இராம தாஸர் வழி வந்த வேங்கட வரத தாசர் என்பவர் , பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில் ஸ்ரீ žதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் பெருமளை பிரதிஷ்டை செய்து இக்கோவிலைக் கட்டினார். இந்த ஸ்ரீ பட்டாபிஷேக இராமரே இக்கோவிலின் ஆதி மூலவர். நஞ்சை அமுதாக்கி கோதண்டராமராகவும் இக்கோவிலில் பெருமாள் வந்து அமர்ந்த அற்புத லீலையைப் இனிப் பார்ப்போமா?

தை அமாவாசையன்று லக்ஷ தீபத்தில் ஒளி்ரும் ஸ்ரீ கோதண்டராமர்



வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இப் பெருமாளின் பக்தர். இவருக்கு நேர் வாரிசு கிடையாது . எனவே இவரது பங்காளிகள் இவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டு மெல்ல கொல்லும் விஷத்தை இவரது உணவில் கலந்து விட்டனர். இந்த உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டுடை அண்ணலிடம், அந்த ஸ்ரீ ராமரிடம் இவர்கள் கபடம் எவ்வாறு செல்லும், குறிப்பினால் எம்பெருமான் இந்த உண்மையை செட்டியாருக்கு உணர்த்தி விஷத்தையும் முறித்து விட்டார். பின் கோவிலை பெரிதாக கட்டித்தர ஆணையிட்டார். அதே சமயம் கோவில் நிர்வாகி ப்ரா.வே. தேனு குப்தா வெங்கட ரங்கையா அவர்கள் கோவிலை பெரிதுபடுத்த நினைத்தார். செட்டியாரும் பெருமாள் ஆனையை கூறி ரூபாய் 4000/- கொடுத்தார். கோயிலின் பழைய சாமான்களை விற்ற பணம் ரூபாய் 1000/-த்தையும் சேர்த்து 1926 ஜூன் 23 தேதி தொடங்கி, 26ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆகமவிதிப்படி விரிவாக்கப்பட்டு, 1927ம் வருடம் ஏப்ரல் 30 நாள், நின்ற கோல கோதண்டராமர் , சீதா பிராட்டி, இலக்குவன் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாஸன ஆகமவிதிப்படி, கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. திருநீர் மலை ரங்கனாதப் பெருமாள் சம்ரோக்ஷணத்தன்று இத்தலத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் செய்த லீலையின் நினைவாக குப்பைய செட்டியார் தனது மற்றும் தனது மனைவி ஆண்டாளம்மாள் இருவரும் எம்பெருமானை கீழே விழுந்து வணங்கும் நிலையில் சிலைகளை தரையில் செதுக்கச் செய்தார். இன்றும் முன் மண்டபத்தில் இந்த சிலைகளை நாம் காணலாம்.


அனுமன் சன்னதியின் அழகு ஓவியம்





இனி இக்கோவிலின் அமைப்பைப் பார்போமா? கோவிலுக்குள் நுழையும் போது மொட்டை கோபுரம் தான் நம்மை வரவேற்கின்றது முகப்பில் பட்டாபிஷேக இராமர் திருக்கோல சுதை சிற்பம். உள்ளே நுழைந்தவுடன் அனுமன் சன்னதியின் பின் பகுதி, தன் இதயத்தை பிளந்து ஸ்ரீžதாராமரை காட்டும் கோலமும், கருட பகவானும் நம்மை வரவேற்கின்றனர். சன்னிதியில் சிறிய திருவடியாம் மாருதி, சஞ்žவி மலையை து‘க்கிய நிலையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார், அவரது அழகே அழகு, அஞ்சனா தேவியின் அற்புத புத்திரனின் சன்னிதியின் முன் அழகான மண்டபம், மண்டபத்தின் சுவற்றில் இராமாயண கதை மிகவும் அழகாக சித்திரக்களாக தீட்டப்பட்டுள்ளன.( நேற்றைய பதிவில் கண்ட சித்திரங்கள்) பலி பீடத்தில் உப்பும், மிளகும் கொட்டப்பட்டுள்ளன, அம்மன் கோவில்களில் நாம் பார்க்கும் காட்சி இங்கே அனுமன் சந்நிதியிலும் பார்க்கக் கிடைக்கின்றது.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.

( ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் குமாரன் அனுமன், மற்றொரு ஐம்பூதமான ஆகாயத்திலே தாவி, மற்றொரு ஐம்பூதமா ஆழ் கடலை ஸ்ரீ ராமாருக்காக தாவி, இலங்கையிலே பூமி பிராட்டியின் திருமகளார் žதாபிராட்டியைக் கண்டு , கண்டனன் கற்பினுக்கணியை என்று ஆனந்தக்கூத்தாடி, இலங்கையை ஐம்பூதங்களின் ஒன்றான அக்னிக்கு இரையாக்கினான் அந்த சுந்தரன் நம்மை காப்பான்.) என்று சொல்லின் செல்வனை மனதார வணங்கி விட்டு உள்ளே சென்றால் வல பக்கம் ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. அதன் கரையில் உள்ள கல் வெட்டில் தும்பல பெண்ட நாராயண செட்டியார் நினைவாக அவரது பாரியாள் காமாக்ஷ'யம்மாள் அவர்களால் கீலக வருடம் ஸ்ரீ ஸ்ரீ கோதண்டராமருக்கு ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளமும், இலக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளி கிணறும் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தமிழிலும், சுந்தரத் தெலுங்கிலும் இயம்புகின்றது. குளக்கரையில் முன் மண்டபத்துடன் கூடிய ரங்கநாயகித் தாயார் சன்னதியில் ஜகன் மாதாவை வணங்கி தாயார் சன்னதியை வலம் வந்தால், ஊஞ்சல் மண்டபம் காணலாம். வெளி மண்டபத்தின் மேலே கோதண்ட ராமர் சுதை சிற்பம். தீபஸ்தம்பம், பலி பீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருடன் சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கருடன் சன்னதியிலும் தெலுங்கில் கல்வெட்டு உள்ளன. கருடனின் அனுமதி பெற்று இராமர் சன்னதியை வலம் வரும் போது விஷ்வசேனர் கோஷ்டத்தில், தானாகவே தோப்புக்கரணம் போட்டு பின் உள்ளே நுழையும் போது இரு புறமும் யானை சிலைகளை கண்டு களிக்கலாம். முன் மண்டபம் இப்போது சன்னதிகள் ஆகியுள்ளன. வலப்புரம் ரங்கனாதர் சன்னதி, இரு புறமும், தாயார்கள் இருவரும் அமர்ந்திருக்க நாபியிலிருந்து பிரம்ம தேவர் எழுந்தருளிய நிலையில், சிறு புலியூர் போல் பால சயனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.


பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடி வணங்கி விட்டை பின் கர்ப்ப கிரகத்தை நோக்கி உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் கோதண்ட ராமராக ஸ்ரீ ராமரும், žதா பிராட்டியும், இலக்குவனும் கிழக்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். கீழே ஆதி மூலவரான பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கின்றார். பட்டாபிஷேக ராமர் அருகே ஸ்னான மூர்த்தி, சக்கரத்தாழ்வார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர் எம்பெருமானின் திருமேனி அழகே அழகு. வெள்ளி கவசம் போர்த்தப்பெற்று எழிலாக வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் ஏந்தி சேவை சாதிக்கின்றனர்.


ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே !
ரகுநாதாய நாதாய žதாய: பதயே நம: !! என்றும்


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே !
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம் வராணனே !!
என்று ஈஸ்வரரே திருவாய் மலர்ந்தருளிய சகஸ்ர நாமத்தின் சாரமான ராம நாமத்தை மனமுருக ஜபித்து நின்றால் மனது அப்படியே லேசாகி விடுகின்றது, ஸ்ரீ ராமரை வணங்கி வெளியே வந்தால் இடப்புறம் யோக நரசிம்மர் சன்னதி. அவரை

நவநீத கிருஷ்ணர் காளிங்க நர்த்தன கோலம்



யோக நரசிம்மர் உபய நாச்சியார்களுடன்





ஆடியாடி அகங்கரைந்து இசை
பாடிபாடிக் கண்ணிர் மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா!
என்று
வேண்டி இச்சன்னதியிலே உற்சவ மூர்த்த்தியாக எழுந்தருளியுள்ள நவநீத கிருஷ்ணரையும் வணங்கி மற்ற சன்னதிகளுக்கு செல்வோம்.



இராமாயண சுருக்கம், இராகவனே தாலேலோ என்று தாலாட்டு என்று இராமரை பற்றி அதிகம் பாசுரம் பாடியதாலோ என்னவோ குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி. அடுத்தது கருடன், சேனை முதலியார், நம்மாழ்வார், மற்றும் கலியன் சன்னதி . அடுத்த சன்னதி ஆச்சாரியர்கள் சன்னதி, உடையவரும், சலிக்கிராம மாலையுடன் , அனந்தழ்வார் குடைப்பிடிக்க மணவாள மாமுனிகளும் சேவை சாதிக்கின்றனர்.



சன்னதியிலிருந்து வெளியே வந்தால் இடப்பக்கம் தல மரமாக வேம்பும், அரசும் உள்ளதை காணலாம். அருகிலே துளசி நந்தவனம் அந்த துளசி மணததை அனுபவித்து மேலும் நகர்ந்தால் ஆண்டாள் சன்னதியும், மற்றும் திருக்கல்யாண மண்டபமும் காணலாம். இம்மண்டபத்திலேயே பரமபத வாசலும் உள்ளது, வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட நாதர் அலங்காரத்தில் எம்பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். அன்றைய தினம் மூலவருக்கு முத்தங்கி சாத்தப்படுகின்றது. அலங்கார மண்டபமும் இதுவே. கோவிலுக்கு எதிரே வாகன மண்டபம் பிரம்மோற்சவ காலத்தில் பெருமளுக்கு அலங்காரம் இங்கு நடை பெறுகின்றது இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்ப்போமா?


வைகுண்ட நாதராக ஸ்ரீ ராமர்


பெருமாள்களின் நடசத்திரத்தன்று அவர்களுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகின்றது மாலையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஸ்ரீ ராமருக்கும், žதா பிராட்டிக்கும், இலக்குவன், அனுமன், குலசேகராழ்வாருக்கு மாதப்பிறப்பன்றும் புனர்வசு நடசத்திரத்தன்றும், ஏகாதசியன்றும் காலையில் திருமஞ்சனம் மாலையில் உள் புறப்பாடு, பெருமாள் திருமொழி பாராயணம் . உத்திரம் ரங்க நாயகி தாயார் மாலை உள் புறப்பாடு, சிறிய திருமடல் . பூர நட்சத்தன்று ஸ்ரீ ஆண்டாள் , நாச்சியார் திருமொழி . ரோகிணி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் பெரியாழ்வார் திருமொழி. ரேவதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கனாதர் , திருமாலை, அமலனாதிபிரான். ஸ்வாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நரசிம்மர் , பெரியாழ்வார் திருமொழி. விசாக நட்சத்திரத்தன்று நம்மாழ்வார் , திருவாய்மொழி. பூராடம் சேனை முதல்வர், திருவாய் மொழி, கிருத்திகை திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி. திருவாதிரை உடையவர் , இராமானுஜ நு‘ற்றந்தாதி. மூலம் மணவாள மாமுனிகள் உபதேச இரத்தின மாலை.







ஸ்ரீ ராமர் கருட சேவை


எம்பெருமாளை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் வருடத்தில் நான்கு நாட்கள் மும்மலம் நீக்கும் கருட சேவை இக்கோவிலில் நடைபெறுகின்றது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் சேவை சாதிக்கின்றார். ஆனி மாதத்தில் ஸ்வாதியன்று ஆனி கருடன், ஸ்ரீ நரசிம்மர் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் . ஆடி மாதம் பௌர்ணமியண்று கஜேந்திர மோக்ஷம், ஸ்ரீ ரங்கனாதர் கருட சேவை. மாசி மகத்தன்று ஸ்ரீ ராமர் கருட சேவை. இராம நவமியன்று காலை அலங்கார திருமஞ்சனம், மாலை பட்டாபிஷேக கோலத்தில் மாட வீதி புறப்பாடு.




தமிழ் வருடப்பிறப்பன்று அலங்கார திருமஞ்சனம். சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம் காலையிலும் மாலையிலும் ஒவ்வாரு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வருகின்றார் ஸ்ரீ ராமர். முதல் நாள் காலை த்வஜாரோஹணம், கேடயம், பெரியாழ்வார் திருமொழி. மாலை ஹம்ச வாஹனம், இயற்பா முதல் திருவந்தாதி. இரண்டாம் நாள் காலை சூரியப்பிரபை, பெரியாழ்வார் திருமொழி. மாலை சந்திரப்பிரபை ( žதாவலோஹனம்), இயற்பா இரண்டாம் திருவந்தாதி. மூன்றாம் நாள் காலை பல்லக்கு(ஹர தனுர் பங்கம்) பெரியாழ்வார் திருமொழி. மாலை கருட வாகனம் , இயற்பா முன்றாம் திருவந்தாதி. நான்காம் நாள் காலை சேஷ வாஹனம் பெரியழ்வார் திருமொழி, மாலை ஸ'ம்ம வாஹனம் இயற்பா நான்முகன் திருவந்தாதி. ஐந்தாம் நாள் காலை நாச்சியார் திருக்கோலம் திருப்ப ‘வை, நாச்சியார் திருமொழி, மாலை ஹனுமந்த வாஹனம், பெருமாள் திருமொழி, ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம், புன்னை மர வாஹனம் திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணினுண் சிறு தாம்பு, மதியம் திருக்கலயாணம், மாலை யானை வாகனம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, ஏழாம் நாள் காலை திருத்தேர் திருவெழுக்கூற்றிருக்கை பெரிய திருமொழி மாலை தோளுக்கினியான், சிறிய திருமடல், பெரிய திருமடல், பெரிய திருமொழி, எட்டாம் நாள் காலை வெண்ணய்த்தாழி பல்லக்கு பெரிய திருமொழி, மாலை குதிரை வாகனம், பெரிய திருமொழி, ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி பல்லக்கு(போர்வை களைதல்) பெரிய திருமொழி , மாலை புஷ்பப்பல்லக்கு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், பத்தாம் நாள் காலை த்வாதசாராதனம், திருவாய் மொழி1000, மாலை பட்டாபிஷேகக் கோலம், இராமானுஜ நு‘ற்றந்தாதி இயல் சாத்து, பின் மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம். சித்திரை திருவாதிரையை ஒட்டி பத்து நாட்கள் உடையவர் உற்சவம்.




வைகாசியில் முதல் வெள்ளி தாயார் உள் புறப்பாடு, மூன்று நாட்கள் வசந்த உற்சவம், முதல் இரண்டு நாட்கள் உள் புறப்பாடு, மூன்றாம் நாள் மாட வீதி புறப்பாடு. ஆனி மாதம் தோட்ட உற்சவம், ஸ்வாதியன்று ஆனி கருடன், பௌர்ணமியன்று ஜேஷ்டாபிஷேகம், ஆனித் திருமூலம் மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேஸவைபவம் ஈடுமஹோத்ஸவம். ஆடி மாதம் பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம். திருவாடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி மாதம் ஸ்ரீ ஜயந்தியன்று நவநீத கிருஷ்ணர் புன்னைமர வாஹன சேவை. வினாயக சதுர்த்தியன்று தும்பிக்கையாழ்வார் திருமஞ்சனம். ஸம்வத்ஸராபிஷேகம் (ஸம்ப்ரோக்ஷனை தினம்) விசேஷ அலங்கார திருமஞ்சனம், மாலை மூலவர் புஷ்பாங்கி சேவை, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம். பவித்ரோத்ஸ்வம் மூன்று நாட்கள், மூன்றாம் நாள் மாடவீதி புறப்பாடு . ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருமூலத்தன்று கோயில் செல்வ மணவாள மாமுனிகள் சாற்றுமுறை . பூராடம் சேனை முதல்வர் சாற்று முறை, கார்த்திகையில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, கார்த்திகை தீபம். மார்கழி மாதம் தனுர் மாத பூஜை, ஹனுமன் ஜயந்தி, உள் புறப்பாடு, வைகுண்ட ஏகாதசி காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, மூலவர் முத்தங்கி சேவை. போகி ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீ ரங்க நாதர்-ஆண்டாள் உள் புறப்பாடு. தை மாதத்தில் அமாவாசையன்று லட்ச தீப மஹோத்ஸவம். அன்று திருக்கோவில் முழுவதும் அழகிய கோலங்களினால் அலங்கரிக்கப்படுகின்றது, திருக்குளமும் தீபங்களால் ஒளிர்வதைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் ஆஸ்தானத்தில் விளக்குக்கிடையில் கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகே அழகு. ரத சப்தமியன்று ஸ்ரீ ராமர் திருமஞ்சனம். கடை வெள்ளி ஸ்ரீ ரங்க நாயகித்தாயார் திருமாங்கல்ய சரடு உற்சவம். மாசியில் மாசி மக கருட சேவை. பங்குனியில் யுகாதியன்று பஞ்சாங்க சங்கரகம். பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ தாயார் திருக்கல்யாணம் ஸ்ரீ ரங்கநாதர் மாட வீதி புறப்ப ‘டு. இவ்வாறு வருடத்தில் 250 நாட்களுக்கு மேலாக உற்சவம்தான்.


பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம்



இவ்வாறு அன்பர்க்கு உதவும் ஆபத் சகாயனாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோதண்ட ராமரை


அலையார் கடற்கரை மருவிச் சிலைதாங்கிய சீலனே வாழியவே!



சேதுபந்தம் திருத்தின சேமநல் வீடே வாழியவே!


வியன் காண மரத்தின் நிழற் கல்லணைமேல் மண்துயிலக் கற்ற கண்மணியே வாழியவே!


வெற்பெடுத்து வேலை நீர் கட்டிய வீராதி வீரனே வாழியவே!


மல்லை முந்நீர் அதர்பட மலையால் அணை செய்த வெங்கணை காகுத்தா வாழியவே!


மாலும் கடலாற மலைக்குவடிட்டு அணை கட்டிய அண்ணலே வாழியவே!


அலைகடலை கடைந்தடைந்தம்மானே வாழியவே!


தடங்கடலை கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணா வாழியவே!





என்று வணங்கி வழிபட கிளம்பிவிட்டீர்களா இப்போதே?

* * * * * * *

Labels: , , ,

Wednesday, April 9, 2008

சித்திர இராமாயணம்

Visit BlogAdda.com to discover Indian blogs
அஞ்சனையின் அருந்தவப் புதல்வன்
அஞ்சாத தீரன் சுந்தரன் அனுமன்
சூரியனை பழம் என்று எண்ணி பறிக்கச் செல்லும்காட்சி.

பிரம்மன் அனுமருக்கு வரம் அருளும் காட்சி


பராசக்தியை தேடி கண்டுபிடிக்க
வானர அரசன் சுக்ரீவருடன்
இராம லக்ஷ்மணர் ஆலோசனை



தெற்கு திசை நோக்கி செல்லும்

வானர வீரர்களுக்கு இராமபிரான்

அருளுதல்




அனுமனிடம் கணையாழி வழங்குதல்





அசோக வனத்தில் தாயிடம்

அனுமன் சூடாமணி பெறுதல்




லங்கா தகனம்


ராம இராவண யுத்தம்

இராம பட்டாபிஷேகம்




சீதா பிராட்டியாரிடம் முத்துமாலை


பரிசாக பெறும் சுந்தரன்

இப்படங்கள் மேற்கு மாம்பலம் கோதண்ட இராமர் ஆலய சஞ்சீவி ஆஞ்சனேயர் சன்னதியில் வரையப்பட்டுள்ள சித்திரங்கள். தக்ஷிண பத்ராசலம் என்று போற்றப்படும் இத்தலத்தின் மகிமையை அடுத்த பதிவில் காண்போம்.

ஸ்ரீ ராம நவமி - 5 (பாசுரப்படி ராமாயணம் - யுத்த காண்டம்)

Visit BlogAdda.com to discover Indian blogs
கோதண்ட ராமர்


இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.

யுத்த காண்டம்




இராம இராவண யுத்தம்



காண எண்கும் குரங்கும் முசுவும்







படையாக் கொடியோனிலங்கை புகலுற்று








அலையார் கடற்கரை வீற்றிருந்து








செல்வ வீடணனுர்க்கு நல்லானாய்








வீரிநீ ரிலங்கை யருளிச்








சரண்புக்க குரைகடலை அடலம்பால் மறுக எய்து








கொல்லை விலங்கு பணிசெய்ய








மலையாலணை கட்டிமறுகரையேறி








இலங்கை பொடி யாகச்








சிலைமலை செஞ்சரங்கள் செல வுய்த்துக்








கும்பனொடு நிகும்பனும்பட








இந்திரசித் தழிய கும்பகர்ணன் பட








அரக்கராவி மாள, அரக்கர்








கூத்தர் போலக் குழமணி தூரமாட








இலங்கை மன்னன் முடி யொருபதும்








தோளிருபதும் போயுதிரச்








சிலைவளைத்துச் சரமழை பொழிந்து








கரந்துணித்து வெற்றிகொண்ட செருகளத்துக்








கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்







எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்







மற்றுமுள்ள வானவர் மலர்மழை பொழிந்து







மணிமுடி பணிதர அடியிணை வணங்கக்







கோலத்திருமா மகளோடு







செல்வவீடணன் வானரக் கோனுடன்







இலக்குமணி நெடுந்தேரேறி







சீரணிந்த குகனொடு கூடி







அங்கணெடு மதில் புடைசூழ் அயோத்தி எய்தி




ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகம்







நன்னீராடிப்




பொங்கு இள ஆடை அரையில் சாத்தித்




திருசெய்ய முடியும் ஆரமும் குழையும்




முதலா மேதகு பல்கலனணிந்து




சூட்டு நல்மாலைகளணிந்து




பரதனும் தம்பி சத்துருக்கனனும்




இலக்குமணனும் இரவும் நண்பகலும் ஆட்செய்ய




வடிவினை இல்லாச் சங்குதங்கு முன்கை நங்கை




மலர்குழலாள் சீதையும் தானும்




கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்




தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்.






சுபம்

மங்களம்


பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html

அயோத்தியா காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/2.html

ஆரண்ய காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/3.html

சுந்தர காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/4.html




பாசுரப்படி ராமாயணம் நிறைவு




Monday, April 7, 2008

ஸ்ரீ ராம நவமி - 4 (பாசுரப்படி ராமாயணம் - கிஷ்கிந்தா , சுந்தர காண்டங்கள்)

Visit BlogAdda.com to discover Indian blogs
லக்ஷ தீப ஒளியில் ஒளிரும் ஸ்ரீ கோதண்ட இராமர்





இராமாயணம் பாராயணம் செய்த நிறைவும், திவ்ய பிரபந்தத்தை சேவித்த அமைதியும் ஒருங்கே தரவல்ல பாசுரப்படி ராமாயணத்தை இராம நவமி சமயத்தில் பதிகின்றேன் அன்பர்கள் சேவித்து ஸ்ரீ சீதா ராமனின் அருள் பெற வேண்டுகின்றேன்.


வடுவூர் இராமன் வடிவழகு






கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி யரசன் காதல் கொண்டு


மரா மரம் ஏழ் எய்து


உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டி


கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசளித்த


வானுரக் கோனுடனிருந்து,


வைதேகி தனைத் தேட விடுத்த திசைக் கருமம் திருத்த


திறல் விளங்கு மாருதியும் மாயோன் தூதுரைத்தல் செப்ப!
* * *


சுந்தர காண்டம்



சீராரும் திறல் அநுமன் மாகடலை கடந்தேறி


மும்மதிள்நீள் இலங்கை புக்குக்கடிகாவில்


வாராரு முலை மடவாள் வைதேவி தனைக்கண்டு


நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருள்வாய்!


அயோத்தி தனில் ஓர்


இடவகையில் எல்லியம் போது இனிது இருத்தல்


மல்லிகை மாமாலை கொண்டார்த்ததும்


கலக்கியமா மனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட


மலக்கிய மனத்தன்னாய் மன்னவனும் மறாதொழியக்


குலக்குமரா காடுறையப்போ என விடை கொடுப்ப


இலக்குமணன் தன்னோடங்கேகியதும்


கங்கை தன்னில்


கூரணிந்த வேல்வலவன் குகனோடு


சீரணிந்த தோழமை கொண்டதும்


சித்திரக் கூடத் திருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்


சிறுகாக்கை முலை தீண்டி மூவுலகும் திரிந்தோடி


வித்தகனே! ராமா ஓ! நின்னபயம் என்ன


அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்


பொன்னொத்த மானொன்று புகுந்தினிது விளையாட


நின்னன்பின் வழிநின்று சிலைப்பிடித் தெம்பிரானேகப்


பின்னேயங்கு இலக்குமணன் பிரித்ததுவும்


அயோத்தியர் கோனுரைத்த அடையாளம்


ஈதவன்கை மோதிரமே என்று


அடையாளம் தெரிந்துரைக்க


மலைகுழலால் சீதையும்


வில்லிறுத்தான் மோதிரம் கண்டு


அநுமான் அடையாளம் ஒக்கும் என்று


உச்சி மேல் வைத்து உகக்க


திறல் விளங்கு மாருதியும்


இலங்கையர்க்கோன் மாக்கடி காவையிறுத்து


காதல் மக்களும் சுற்றமும் கொன்று


கடி இலங்கை மலங்க எரித்து


அரக்கர்கோன் சினமழித்து மீண்டு அன்பினால்


அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடியிணைபணிய




பால காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/1.html

அயோத்தியா காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/2.html

ஆரண்ய காண்டம் : http://narasimhar.blogspot.com/2008/04/3.html




பாசுரப்படி ராமாயணம் தொடரும்............